Saturday, December 8, 2012

என்னவள் என்றுமே இனியவள்

என்னவள்  என்றுமே இனியவள் 





பிக்காசாவால் கூடஉன்னை விட அழகானதொரு 
ஓவியம் வரையமுடியாது...
பிரம்மனே நினைத்தாலும் உன்னைவிட அழகானதொரு 
சிற்பத்தை செதுக்க முடியாது... 


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும் 
என் பார்வைக்கு நீ புதிதாகவே தோன்றுகிறாய் 
நீ தான் பாரதி கண்ட புதுமை பெண்ணை இல்லை 
எனக்கு மட்டும் புரியாத பெண்ணா...

உன் கண்களைவிட கூர்மையான ஒரு வாள் இல்லை 
என் இதயத்தை சிறுசிறு துண்டுகளாக கீற..
உன் அழகை பற்றி கவிதை எழுத உவமையை தேடினேன் 
அழகு என்ற வார்த்தைக்கே நீதான் உவமை என்பதை மறந்து..

--
என்றும் நட்புடன் 
$ஜெயமாறன் நிலாரசிகன் $

1 comment:

Anonymous said...

நீ தான் பாரதி கண்ட புதுமை பெண்ணை இல்லை
எனக்கு மட்டும் புரியாத பெண்ணா...

Super line....